Header Ads



UNP யின் ஜனாதிபதி வேட்பாளர், சந்தி சந்தியாக இடம்பெறும் கூட்டங்களில் தீர்மானிக்கப்படுவதில்லை - நவீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சந்தி சந்தியாக இடம்பெறும் கூட்டங்களில் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நீண்டகால பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு கட்சிக்கென்று சில ஒழுங்கு விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்ப உரிய நேரத்தில் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இது வரை சிறுபான்மை மக்களுக்கு கூடுதலாக அநீதி இழைத்த கட்சி ஐ தே க இப்போது தமக்குள் ஜாதி வேற்றுமை பார்த்து சஜித்தை ஓரம்கட்ட நினைக்கிறீர்கள் ஆக இந்த பெரும்பான்மை கட்சிகளான UNP , SLFP இவைகளை ஓரம் கட்டிவிட்டு JVP க்கு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்க்கலாமே!

    ReplyDelete

Powered by Blogger.