Header Ads



மகிந்த உள்ளிட்ட Mp க்களை பதவி நீக்குங்கள் - மைத்திரியிடம் சந்திரிக்கா கோரிக்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்ற சுதந்திரக் கட்சி எம் பிக்களை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ,ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ள சந்திரிகா , அப்படி நீக்கப்படும் தேசியப்பட்டியல் எம் பிக்களின் இடங்களுக்கு புதியவர்களை நியமிக்குமாறும் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றதன் மூலம் மஹிந்த ராஜபக்சவும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்திருப்பதால் முன்னைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கலாமென முன்னாள் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் குறித்து கேட்டுக் கொண்ட ஜனாதிபதி மைத்ரி உடனடியாக பதில் எதனையும் வெளியிடவில்லையென அறியமுடிந்தது.

1 comment:

  1. அம்மையாரே எங்கட ஜனாதிபதி அவ்வளவு தைரியமுள்ளவர் என்கிறீர்களா ?

    ReplyDelete

Powered by Blogger.