Header Ads



முஸ்லிம்க‌ளுக்கான உரிமைக‌ளை த‌டுத்த‌ JVP, சிங்களவர்கள் முஸ்லிம்க‌ளை தாக்கியபோது எங்கிருந்தனர்?

த‌மிழ‌ர்க‌ளும், முஸ்லிம்க‌ளும் த‌ம‌க்கு வாக்க‌ளித்தால் த‌ன‌து வெற்றி உறுதி என்ற‌ ஜே.வி.பியின் த‌லைவ‌ரின் க‌ருத்து ய‌தார்த்த‌மாக‌ இருந்த‌ போதும், அது மிக‌வும் தாம‌த‌மான‌ ஞான‌மாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

உலமா கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் இன்றைய தினம் -31- வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

மிக‌ நீண்ட‌ கால‌மாக‌ நாடாளுமன்றை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தும் ஜே.வி.பியின‌ர், அர‌சுக‌ளின் பின்ப‌ல‌த்துட‌ன் சிங்க‌ள‌வர்க‌ள் முஸ்லிம்க‌ளை தாக்கிய‌ போது அத‌ற்கெதிராக‌ க‌ள‌த்தில் இற‌ங்கி த‌டுத்த‌ வ‌ர‌லாறு உண்டா?

மாறாக‌ முஸ்லிம்க‌ளுக்கு கிடைக்கும் உரிமைக‌ளையும் த‌டுத்த‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ஜே.வி.பியின‌ர் நிறைவேற்றினர்.

தீக‌வாப்பிக்கென‌ அர‌சால் சுவீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ளுக்கு மாற்றுக்காணியை த‌லைவ‌ர் அஷ்ர‌ப் வ‌ழ‌ங்க‌ முற்ப‌ட்ட‌ போது ஜே.வி.பியின‌ர் அம்பாறையில் ஆர்ப்பாட்ட‌ம் செய்து அத‌னை த‌டுத்த‌ வ‌ர‌லாற்றை ம‌ற‌ந்து விட்டு இப்போது ஞான‌ம் வ‌ந்து பேசுகிறார்க‌ள்.

இப்போதாவ‌து ஜே.வி.பியின‌ர் நியாய‌மாக ந‌ட‌ந்து கொண்டார்க‌ளா என்றால் அதுவும் இல்லை.

க‌ல்முனையில் முஸ்லிம்க‌ளின் பெருவாரி நில‌ங்க‌ளை க‌ல்முனை த‌மிழ் உப‌செய‌ல‌க‌ம் என்ற‌ பெய‌ரில் அப‌க‌ரித்து விட்டு அவ‌ற்றை த‌னி செய‌ல‌க‌மாக‌ த‌ர‌முய‌ர்த்த‌ இன‌வாத‌ த‌மிழ‌ர் முய‌ற்சித்த‌ போது இது விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள் த‌ர‌ப்பு நியாய‌த்தை கேளாம‌ல் ஒரு த‌ர‌ப்புக்கு ஆத‌ர‌வாக‌ ஜே.வி.பி அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய‌து.

இர‌ண்டு த‌ர‌ப்பின‌ருக்கிடையில் பிர‌ச்சினை ஏற்ப‌ட்டால் அவ்விரு த‌ர‌ப்பையும் அழைத்து பேசிவிட்டு த‌ம் தீர்ப்பை சொல்வ‌தே நீதி என்ப‌தைக்கூட‌ புரியாம‌ல் ஜே.வி.பி ந‌ட‌ந்து கொண்ட‌மை க‌ல்முனை முஸ்லிம்க‌ளுக்கும், த‌மிழ‌ர்க‌ளுக்கும் இடையில் மோத‌லை உருவாக்கி குளிர்காணும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாகும்.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என‌ ஜே.வி.பி பிரேர‌ணை நிறைவேற்றிய‌து ம‌ற‌ந்து விட்ட‌தா? இவ்வாறு இன‌ங்க‌ளுக்கு அர‌சிய‌ல் சாச‌ன‌த்தில் வ‌ழங்க‌ப்ப‌ட்டுள்ள‌ உரிமைக‌ளை இல்லாம‌ல் செய்வ‌தே ஜே.வி.பி சொல்லும் இன‌, ம‌த‌ பேத‌ம‌ற்ற‌ இல‌ங்கையாகும்.

தான் ஆட்சிக்கு வ‌ந்தால் வ‌ட‌க்கு, கிழ‌க்கு த‌மிழ் மற்றும் முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை தீர்ப்போம் என‌ அனுர‌ குமார‌ கூறுகிறார். முத‌லில் வ‌ட‌க்கு, கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் என்ன‌ என்றாவ‌து இவ‌ருக்கு தெரியுமா என‌ கேட்கிறோம்.

முத‌லில் வ‌ட‌க்கு, கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ளின் பிர‌ச்சினை இதுதான் என‌ இவ‌ரின் வாயால் கூற‌ முடியுமா என‌ கேட்கிறோம்.

இன்று வ‌ரை நாடாளுமன்றில் இருந்தும் வ‌ட‌க்கு, கிழ‌க்கு த‌மிழ் மற்றும் முஸ்லிம்க‌ளுட‌ன் கை கோர்த்து அர‌சிய‌ல் கோதாவில் இற‌ங்காம‌ல் இருந்து விட்டு இப்போது தேர்த‌ல் வ‌ரும் போது இவ்வாறு அனுர‌ குமார‌ பேசுவ‌த‌ன் மூல‌ம் அவ‌ரும் ஒரு அர‌சிய‌ல் வியாபாரியாக‌வே தெரிகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது

9 comments:

  1. JVP too is a political party which is same others who try to draw support of the majority Buddhists they have to shout and do anything against Muslims, otherwise difficult to emerge in Srilanka political

    ReplyDelete
  2. Evenda pondatty evenoda ponalum ivarukku pirachchinay illai.mubarak Abdul majeedukku tewai mahinda gotta aatchi than.iwar oru manam ketta mahinda Rajapaksa waadi maulavi.

    ReplyDelete
  3. (1) JVP என்ன செய்தாலும் முஸ்லிம் தலைவர்கள் ரணில் or மகிந்த கட்சிகளை மட்டுமே ஆதரிப்பார்கள், ஏனெனில் அங்கு தான் பணம்-பதவிகள் கிடைக்கும்

    (2) சிங்கள-முஸ்லிம் கலவரங்களுக்கு இருவரும் தான் காரணம்.

    ReplyDelete
  4. அப்படிப் பார்த்தால் அரசியலில் நீங்கள் மட்டும்தான் சுத்தமானவர்கள். மற்றவரெல்லாம் தகுதி இல்லாதவர்கள்.

    ReplyDelete
  5. HELLOOO RED CAP MAJEED
    ALL ARE SAME
    RANIL, SAJITH. Mahinda , Gota and Sri sena all were watching the match of digan , kurunegala kuliyapitiya, veyangoda , Ampara
    beruwala, etc etc

    ReplyDelete
  6. JVP is the first party to object wearing Burqa, Abaya etc......

    ReplyDelete
  7. You can say what ever BUT keep remember JVP is far better than all other criminals Politicians and Parties.
    2020 Is For JVP or SDP. Say bye to OLD Culprits...

    ReplyDelete
  8. What the article is stating is correct about JVP, While the writer is blind about Who made violence to Muslim, Which party ministers conducted hate speech toward Muslims, Which party Ministers were in the field during Minuwangoda, Kurunagala attack.

    Does he ask us to forget those too ? Do not be play double standard to get vote for your favour too.

    LET MUSLIMS and Muslism leaders talk to all parties to solve our problems being targetted by RACISM and losing our rights as equal citizens.

    Who every not only agree but put a mechanism to achieve it.. then will vote for them.

    BUT will keep TRUST in GOD ALONE.

    ReplyDelete

Powered by Blogger.