Header Ads



புலிகளை மீள உருவாக்க முயற்சித்தவர் கைது, Dr சிவரூபனின் தகவலினால் மேலும் ஆயுதங்கள் மீட்பு


பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பளை மருத்துவர் சிவரூபனின் தகவலையடுத்து நேற்று யாழ்ப்பாண கடற்கரையொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள சிலரின் உதவியுடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி முயற்சி நடப்பதாக டாக்டர் சிவரூபன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2

புலிகளை மீள உருவாக்க முயற்சித்தவர் கைது

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தமை தொடர்பில் கல்முனை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில்இ முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள்  இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இன்னும் நிறைய பயங்கரவாதிகள் கிழக்கு எங்கும் இருக்கலாம்.

    ReplyDelete
  2. பயங்கரவாதி கருணாவை உடனடியாக கைது செய்து முட்டியில் தட்டி உதை கொடுத்தால் இன்னும் நிறைய புலிப்பயங்கரவாதிகளின் தகவல்கள் அம்பலமாகும்.

    அத்தோடு நின்று விடாமல் Ajan Anthony எனும் புனைப்பெயரில் இணையச் செய்திகளில் உண்மைக்கு புறம்பாக பின்னோட்டம் இட்டு வரும் புலிப்பயங்கரவாத வாலினையும் Interpole மூலம் கைது செய்வதன் மூலம் மேலும் மேலும் தகவல்களை படையினர் பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. I think these all are being fabricated to pull the country towards pre 2015 era...

    ReplyDelete

Powered by Blogger.