Header Ads



சிங்கள அரசர்களை, பாதுகாத்தது முஸ்லிம்களே - ரணில் புகழாரம்

அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் இனவாத செயற்பாடுகளை தோற்கடிக்க முன்வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறைகூவல் விடுத்துள்ளார்.

குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இன்று அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும், இனங்களை பிளவுபடுத்துவதற்கான சதிகளை எதிர்கொண்டு அவற்றை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

முஸ்லிம் இனத்தவரை இலங்கையில் சிறுமைப்படுத்த ஒருசிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

தங்களின் அரசியல் நலன்களை முன்னிட்டே அவர்கள் குறித்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

எந்தவொரு இனத்திலும், எந்தவொரு குழுவிலும் ஒருசில கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அதனை யாராலும் தடுக்க முடியாது. அதற்காக ஒட்டுமொத்த இனத்தையும் குறைகூறுவதை விடுத்து கெட்டவர்களை தனிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் சிங்கள அரசர் காலத்தில் இருந்தே சிங்களவர்களைப் பாதுகாக்க முன்னின்று செயற்பட்டார்கள்.

அந்த வகையில் நாம் இப்போது இலங்கையர் என்ற ரீதியில் முன்வந்து இனங்களைப் பிரித்தாள்வதற்கான முயற்சிகளை தோற்கடிக்க முன்னின்று செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. தேர்தல் வரும் முன்னே, பொய்கள் வரும் பின்னே

    ReplyDelete
  2. What about your national list MP Rathana thero?

    Don't talk as mad

    ReplyDelete
  3. அதட்கு பரிகாரமாக முஸ்லிகளை காப்பாத்த முடியவில்லையே. அப்படியானால் நீங்கள் ஒரிஜினல் சிங்களவர் இல்லை போலும்.

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் வாக்குகளுக்காக இப்போ இப்படி சொல்வது, முஸ்லிம்கள் அடிபடும் போது வாய் மூடி மெளனமாக இருப்பது.

    ReplyDelete
  5. Mr.RNL...

    We Muslim had enough with U, MY3 and MARA.......

    U talk as per the stage to vote as MY3 and MARA do......

    We remember what U, MY3 and MARA did for Muslims during Aluthgama, Digana, Amapara, Minuwangoda racial violence toward Muslims.


    We are no more going to make mistake choosing any of you, who are foxes in cheating us to get our vote and then leave us in the hands of RACIST to earn vote from Buddist majority.

    Hope Waken Up Muslims will vote for Leaders who are TRUTHFUL toward the Peace of this land and All of its people regardless of races.

    If JVP AnuraKumara can offer Agreement of Action to protect the rights of All the people including freedom to practice their own religion.. We can think of Him.

    Muslim Ministers too should consider this direction after seeing the crowd and the growth of JVP meeting in Colombo this time.

    Dear Muslim Brothers and sisters

    LET US NOT FALL IN TO THE SAME PIT ( Selfish Politicians) 2nd time.

    Vote the politician Who will respect the FREEDOM to PRACTICE our
    Religion which first most thing for us in this life.

    ReplyDelete

Powered by Blogger.