Header Ads



கோத்தபாய ராஜபக்ஷ தேசத்துரோகி - லக்ஷ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என்றால் அந்த தேசத்துரோக செயலை கோத்தாபய ராஜபக்ஷவே செய்தார். ஆகவே கோத்தபாய ராஜபக்ஷவே தேசத்துரோகி என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

அத்துடன் ராஜபக்ஷ காலத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையில் பல மோசமான தன்மைகளை மாற்றி ஆரோக்கியமான உடன்படிக்கையை நாம் செய்துள்ளோம்.

இலங்கை  அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.