Header Ads



ரணிலுக்கு எதிராக கிளர்ச்சி, செய்யும் எண்ணம் கிடையாது - ஹரின்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் எண்ணம் தங்களுக்கு கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துமாறு வலியுறுத்தும் தரப்பிர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க விரும்பவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்குழுவின் பெரும்பான்மையினரால் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் விரும்புகின்றோம்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் எண்ணம் தங்களுக்கு கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.