Header Ads



கூட்டணி அமைத்த பின்னரே, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் - அகிலவிராஜ்

ஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும். 5 ஆம் திகதி மாநாட்டில் கூட்டணியை மாத்திரமே உருவாக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாம் நிலை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யாப்பில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகின்றார். 

ஐக்கிய தேசிய கூட்டணி அமைப்பது குறித்து கட்சிக்குள் பல இழுபறி நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் கூட்டணியை உருவாக்க முன்னர் சில திருத்தங்களை யாப்பில் கொண்டுவர எண்டும் என  கட்சியின் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் அழுத்தமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் இவை குறித்து கட்சியின் பிரதான தரப்பினரின் கருத்தினை வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

(ஆர்.யசி)

No comments

Powered by Blogger.