ரணிலின் அதிரடி - கலக்கமடைந்துள்ள சஜித், ஆதரவு அரசியல்வாதிகள்
சஜித் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் அமைப்பாளர்கள் பதவிகளுக்கு இணையாக புதிய இணை அமைப்பாளர்களை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.
இதன்படி மாத்தறை , பண்டாரகம உட்பட்ட பல தொகுதிகளுக்கு இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளராக யாரும் கட்சிக்குள் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த அமைப்பாளர்கள் பலர் முயன்று வருவதன் காரணமாகவே ரணில் அதிரடியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ரணிலின் இந்த முடிவால் கலக்கமடைந்துள்ள எம் பிக்கள் , இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை ரணிலிடம் எப்படிப் பெறுவது என்பது குறித்து யோசனை செய்து வருவதாக தெரிகிறது. TN
Post a Comment