Header Ads



சுதந்திரக்கட்சியை கோத்தபாய பொறுப்பேற்க வேண்டுமென கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்றால் மிகவும் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க,

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருக்கின்றேன். பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் எமக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினர். தாய் வீட்டுக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்றால், அது மிகவும் நல்லது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்படும் முன்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டும் என்ற தீர்மானத்தை தான் எடுத்திருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொண்டாட்டி ஐயும் கொடுக்கலாமே

    ReplyDelete

Powered by Blogger.