யார் என்ன சத்தம் போட்டாலும், ரணிலுடன் மோத முடியாது - ரஞ்சன்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகப் பெரிய அரசியல் சாணக்கியர் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
யார் என்ன சத்தங்களை போட்டாலும் சத்தமிடும் எவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் விவாதத்திற்கு வர மாட்டார்கள்.
ரணில் விக்ரமசிங்கவுடன் எவரும் நேருக்கு நேர் விவாதம் செய்ய முடியாது எனவும் அவருடன் அரசியல் ரீதியாக எவரும் மோத முடியாது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
Post a Comment