Header Ads



மஹிந்தவுடன் இணக்கப்பாடு என்பது பொய், சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் நடுநிலைமை - மைத்­தி­ரி­

-Vi-

முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணக்­கப்­பாடு எதுவும் காணப்­ப­ட­வில்லை.  அவ­ருடன் இணக்­கப்­பாடு காணப்­பட்­ட­தாக  வெளி­யான செய்தி  தவ­றா­ன­தாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். 

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்   அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது.   அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து  ஜனா­தி­ப­தியை  சந்­தித்த   ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச்  சேர்ந்த  சிறு­பான்­மை­யின   அமைச்சர் ஒருவர்   ஜனா­தி­ப­தி­யிடம்  இந்த விடயம் தொடர்பில்  கேள்வி எழுப்­பி­ய­போதே   அவர்  இவ்­வாறு   தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன்  நீங்கள் நடத்­திய சந்­திப்­பின்­போது   பொது­ஜன பெர­மு­னவில்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ருக்கு  ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான இணக்கம்  காணப்­பட்­ட­தா­கவும்  அதற்கு பிரதி உப­கா­ர­மாக உங்­க­ளுக்கு   உரிய பத­வியை   தரு­வ­தற்கு  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்   ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.   இவ்­வா­றான இணக்கம் காணப்­பட்­டுள்­ளதா?  பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை நீங்கள்  ஆத­ரிக்­கப்­போ­கின்­றீர்­களா என்று  அந்த அமைச்சர்   ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி அவ்­வா­றான எந்த இணக்­கப்­பாடும்  ஏற்­ப­ட­வில்லை.  அவ்­வாறு  வெளி­யா­கிய செய்­திகள் தவ­றா­னவை..  அதனை நம்­ப­வேண்டாம் என்று  கோரி­யுள்ளார்.  

இதன்­போது பொது­ஜன பெர­மு­ன­விற்கு நீங்கள் ஆத­ரவு  வழங்­காது  எமது  கூட்­ட­ணிக்கு ஆத­ரவை  வழங்­க­வேண்டும் என்றும் அந்த அமைச்சர்  கோரி­ய­போது  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்   ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால்   இந்த விடயத்தில்  நடுநிலைமை வகிப்பது குறித்து  பரிசீலிக்க முடியும் என்று    ஜனாதிபதி   சுட்டிக்காட்டியதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

3 comments:

  1. நீங்க நடுநிலை வகித்தாலும் இல்லாவிட்டாலும் இப்ப நீங்க செல்லாக்காசுதான் பொத்திகிட்டு மாறுங்க எந்த பிரதான கட்சிகளிலும் உங்களுக்கு இனி இடமில்லை

    ReplyDelete
  2. Do NOT LISTEN TO THE ADVICE
    OF D.JAYASEKARA & DUMINDA D.
    THOSE ARE VISABEEJA OF SLFP.
    THEY WANT TO SELL SLFP TO UNP.
    ALONG WITH CHANDRIKA,& LEAVE U IN THE MIDDLE OF
    THE HIGHWAY.
    TAKE CARE OF YOURSELF.

    ReplyDelete
  3. We don't want to advise him. He will tell something but his actions will completely target himself only. The followers will be left over with none to care. That's why SB team is trying to leave.
    Even Ranil is also in the same boat, I am sure

    ReplyDelete

Powered by Blogger.