Header Ads



ஹரீனை பதவி, நீக்குவாரா ரணில்..?

உடனடியாக வந்து தன்னை சந்திக்குமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் இங்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையா என பிரதமரினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மைக்கமைய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதவியில் இருந்து நீக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.