வவுனியாவில் வெடிப்பொருட்கள் மீட்பு
வவுனியா - கோவில்புதுக்குளம் பகுதியில் இன்று -29- வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்தபகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 2 டெட்டனேற்றர் குச்சிகள், அதற்கு பயன்படுத்தப்படும் 100 மீற்றர் வயர் ரோல் என்பவற்றை அவதானித்துள்ளனர்.
குறித்த வெடிப்பொருட்கள் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் புலிகலின் ஆயுதங்கள்,அரசு,ரானுவம் அனைத்து சந்தேகத்துக்குரிய இடங்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
ReplyDelete