பயங்கரவாதத்துடன் தொடர்புடைய, வைத்தியர் சிவரூபன் கைது
பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று -18- இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவரூபன் என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரிடம் மேலதிக விசாரணைகளை யாழ். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அப்போ இன்னும் புலிகலின் ஆதரவாளர்கள் சுதந்திரமாக வாழுகின்ரனர்,அங்கு மட்டுமல்ல கிழக்கில் மிக அதிகமாக உள்ளனர்,குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்.
ReplyDelete