றிசாத்தின் வேண்டுகோளில் யாழ் முஸ்லிம்களை மீள்குடியேற்ற, வீடுகளை நிர்மாணிக்க பிரதமர் அனுமதி
- பாறுக் ஷிஹான் -
யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) நடந்த கூட்டத்திலே இந்த அங்கீகாரம் வழங்கப் பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன்,அமைச்சர் ரிஷாட்பதியுதீன் கீழான நீண்ட கால இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றும் அமைச்சு நிதிகளையும் ஒதுக்கவுள்ளது.சொந்த இடங்களில் மீளக் குடியேற விருப்புடைய இம்மக்கள் அடிக்கடி பதிவுகளை மேற்கொண்ட போதிலும் அரச காணிகள் கிடைக்காததால்,அலைக்கழிவது குறித்தும் அமைச்சர் ரிஷாட் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த யாழ்,மாவட்ட அபிவிருத்திக் குழு முஸ்லிம்களை மீள் குடியேற்றத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அங்கீகாரம் வழங்கியது.
Hello ரணில் , Mind your business
ReplyDeleteசகல முஸ்லிம்களும் ஏற்கனவே குடியேற்றப்பட்டு விட்டார்கள்
இவர்களை அம்பாந்தோட்டையில் குடியேற்றுங்கள்
you also a human being . so respect other society to live
ReplyDelete