ஹஜ்ஜுல் அக்பரின் கைதுக்கு சர்வதேச ஊடகம் முக்கியத்துவம் - உறவினர், சட்டத்தரணி சந்திக்க அனுமதியில்லை
”ஐந்து பொலிஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் மாவனெல்லையில் உள்ள வீட்டுக்கு வந்து உஸ்தாத் இருக்கிறாரா எனக் கேட்டார்கள். அவரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு எதுவும் அச்சமயம் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. உஸ்தாதுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் சிறியதொரு விசாரணையை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனக் கூறியே பொலிசார் அழைத்துச் சென்றார்கள்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஊடகங்கள் மூலமாகவே அவர் கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அறிந்து கொண்டோம்” என கைது செய்யப்பட்டுள்ள ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் உறவினர் ஒருவர் தெரிவித்ததாக துருக்கியை தளமாக கொண்டு செயற்படும் ‘அனடொலு ஏஜன்சி’ செய்தி வெளியிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை சந்திப்பதற்கு அவரது உறவினர்களுக்கோ அல்லது சட்டத்தரணிகளுக்கோ நேற்றுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli
This newspapers is a subjective papers. only publish his own people's articles. It appears this is working for some groups..
ReplyDelete