"நல்ல முறையிலோ, கெட்ட முறையிலோ ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நிறுத்தப்படுவார்"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலின் கீழ் நாட்டிற்குள் இறையாண்மை பாதுகாக்கப்பட்டு உள்ளதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்காத காரணத்தினால், வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக பணியாற்ற முடிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் அமைச்சரவையின் கீழேயே சஜித் பிரேமதாச திறமையான அமைச்சராக வெளிப்பட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச தனது திறமையை செயலில் காட்டியுள்ளார். இதனை விட பெரிய பணியை செய்வார் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவின் பெயரை மந்திரமாக உச்சரித்து வருகின்றனர். சிலர் சஜித் பிரேமதாசவின் வருகையை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.
நல்ல முறையிலோ அல்லது கெட்ட முறையிலோ ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நிறுத்தப்படுவார் எனவும் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeletefurkanhaj (AKP)Says:-நல்ல முறையிலே நிறுத்த பட வேண்டும்.அப்போது தான் வாக்குகள் பிரிவு படாமல் மொத்தமாக வந்து சேர வாய்ப்பு உண்டாகும்.
ReplyDeleteHow your mytree and company?
ReplyDelete