Header Ads



பாராளுமன்றத்திற்குள் இப்படியொரு பரிதாபமா...?

நாடாளுமன்ற கட்டடத்திலுள்ள தரைப் பகுதியை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தவறான பொருள்களால் ஏற்படும் நழுவல் நிலைமையால், இதுவரை 24 பேர் வழுக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வீழ்ந்தவர்களுள் 6 எம்.பி.க்கள், 14 பெண் ஊழியர்கள் மற்றும் நான்கு வெளி நபர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இந்த வழுக்கும் தன்மை கடந்த 20ஆம் திகதி முதல் நான்கு நாள்களாக இருந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.