Header Ads



ஹக்கீமின் வீட்டில் பணம், காணாமல்போன சம்பவம் - விசாரணைகள் நிறுத்தம்

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டில் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வீட்டில் சுமார் அறுபது லட்சம் ரூபா பணம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முறைப்பாடு செய்த தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறுபது லட்சம் ரூபா பணத்தில் ஒரு தொகுதி பணம் கிழிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.

அமைச்சரின் வீட்டின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த பணமே இவ்வாறு காணாமல் போயிருந்தது.

பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 28ஆம் திகதி குறுந்துவத்த காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.