Header Ads



"கொலை குற்றச்சாட்டுன் தொடர்பில்லாதவரை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் ஆதரவளிப்பேன்"

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒருபோதும் எதிராக செயற்பட மாட்டேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அரசியல் ரீதியில் தற்போது அவர் மேற்கொண்ட தீர்மானங்களே தவறானதாக உள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எனக்கும் எவ்வித  தனிப்பட்ட பிரச்சினைகளும், அரசியல் பிரச்சினைகளும்  கிடையாது. ஆனால் ஒரு தரப்பினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு நன்மதிப்பினை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.

ஜனநாயகத்தை மதிக்கும் கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் நிச்சயம் ஆதரவு வழங்குவேன். ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியிற்கு ஆதரவாக செயற்பட மாட்டேன். சுதந்திரகட்சிக்கே என்றும் விசுவாகமாக செயற்படுவேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

(இராஜதுரை ஹஷான்)

No comments

Powered by Blogger.