Header Ads



ரஜினி காந்திடம், ஓவைசியின் அதிரடிக் கேள்வி


இந்தியாவில் இன்னொரு மகாபாரத போர் நடக்க வேண்டுமா? சொல்லுங்கள்?.. ரஜினியை கேள்வியால் மடக்கிய ஓவைசி!

பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நடிகர் ரஜினிகாந்த் அர்ஜுனர் மற்றும் கிருஷ்ணர் என்று கூறியது பெரிய வைரலாகி உள்ளது.

இது தொடர்பாக மஜ்லீஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

. அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள் என்று ஒரு தமிழ்நாட்டு நடிகர் சொல்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனுமாக இருக்கட்டும். பிரச்சனை இல்லைஆனால் கேள்வி
ஆனால் இங்கு யார் பாண்டவர்கள்.

யார் கௌரவர்கள்? இந்தியாவில் இன்னொரு மஹாபாரத போர் நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

என்று அசாதுதீன் ஓவைசி கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அதோடு இது தொடர்பாக அளித்த பேட்டியில் இந்தியாவில் மஹாபாரத போர் மீண்டும் நடந்தால் தோல்வி அடைய போகும் கௌரவர்கள் யார்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அசாதுதீன் ஓவைசியின் இந்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ரஜினியிடம் அவர் மிக சரியான கேள்வியை எழுப்பி இருக்கிறார் என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே சமயம் பாஜக ஆதரவாளர்களும், ரஜினி ரசிகர்களும் இவருக்கு எதிராக கடுமையாக பொங்கி வருகின்றனர்.

1 comment:

  1. After all Rajini is a Actor. . He is a best actor but he doesn't have any qualification to be a politician.
    He better stay away from Politics without destroying his name as a Actor.

    ReplyDelete

Powered by Blogger.