ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை, மக்களே தெரிவுசெய்துள்ளனர் - ரணிலும் சரியான தீர்மானத்தை எடுப்பார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சரியான தீர்மானம் மேற்கொண்டிருந்ததாக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அதனைபோல, 2019ஆம் ஆண்டும் பிரதமர் சரியான தீர்மானத்தை மேற்கொள்வார் என்றும், எரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர், இன்றைய தினம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமான தெரிவு செய்யப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களே அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள்தான் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள்.எனவே,அவர்களே தெரிவு செய்தால் ஏன் Hon.mr.ranil அவர்களுக்கு சஜித் அவர்களை தெரிவு செய்ய முடியாது.
ReplyDelete