Header Ads



இன்றைய ஐதேக செயற்குழுவில், இதுதான் நடந்தது

கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்த்தற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த கூட்டமைப்பிற்கான யாப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டமைப்பிற்கு கையொப்பமிடும் தினம் தொடர்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் யாப்பில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் தொடர்பில் கட்சி தலைவர்களின் உடன்பாட்டை அடுத்து மீண்டும் யோசனை முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் ஹாச டீ சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. DC

No comments

Powered by Blogger.