கோட்டாபய எமக்கு, சவாலாக இருப்பார் - ஹர்ஷ டீ சில்வா ஒப்புதல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ எமக்கு சவாலானவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பவர்கள் பெருமளவானோர் இலங்கையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, ஹர்ஷ டீ சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment