Header Ads



பாராளுமன்றத்தில் "கூ" அடித்து பந்துலவுக்கு கிண்டல்

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்க்ஷவின் பெயரை அறிவித்த பின்னர் இலங்கையின் பங்குச் சந்தை திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று (20) தெரிவித்தபோது சபையிலிருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கிண்டலடித்ர் உரத்த சத்தத்தில் சிரித்து கூச்சலிட்டனர்.

பந்துல குணவர்தன எம்.பி.யின் இக்கருத்தினால் எதிர்க்கட்சி தரப்பில் பெரும் சிரிப்பொலி எழுந்த நிலையில் ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்கள் ”கூ ” அடித்து பந்துல குணவர்தன எம்.பி.யின் கருத்தை கிண்டலடித்தனர்.எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவும் இதனை சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.