Header Ads



கொட்டாம்பிட்டி பள்ளிவாசலில், மீண்டும் தொழுகை

ஹெட்­டி­பொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொட்­டாம்­பிட்டி லுஃலு பள்­ளி­வா­சலில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த தொழு­கைகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அப்­பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைச் செய­லாளர் முஹம்மத் ஷாபி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், 

பள்­ளி­வா­சலில் தொழு­கை­க­ளுக்கு பொலி­ஸாரால் தடை விதிக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. அவர் தொழு­கை­களை நடாத்­தும்­படி வேண்டிக் கொண்டார். பொலி­ஸா­ரினால் ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் அது தொடர்பில் அவர்­க­ளுடன் பேசு­வ­தா­கவும் கூறினார். இத­னை­ய­டுத்து நாம் தொழு­கை­களை மீண்டும் ஆரம்­பித்­துள்ளோம்.

நாளை (இன்று) பிற்­பகல் 4.30 மணிக்கு பள்­ளி­வாசல் நிர்­வாக சபையில் நால்வர் ஹெட்­டி­பொல பொலி­ஸுக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். ஹெட்­டி­பொல பொலிஸ் நிலைய பதில்­பொ­றுப்­ப­தி­காரி இந்த அழைப்­பினை விடுத்­துள்ளார். நாளை (இன்று) பள்­ளி­வா­சலில் தொழுகை நடாத்­து­வ­தற்கு உத்­தி­யோ­க­பூர்வ அனு­மதி வழங்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

லுஃலு பள்­ளி­வாசல் தௌஹீத் பள்­ளி­வாசல் என்று முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­த­னை­ய­டுத்து கடந்த ஜூலை 18 ஆம் திகதி முதல் அப்­பள்­ளி­வா­சலில் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் தொழுகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.