Header Ads



சஜித்திற்காக சாகும்வரையில் உண்ணாவிரதம் - பௌத்த மதகுருமாரின் ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு அமைச்சரவை சாரா அமைச்சர் ஒருவர் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஜத் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை அமைச்சரவை சாரா அமைச்சர் அஜித் பெரேரா மேற்கொள்ள உள்ளார்.

ஒரு வார காலத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கடந்த வாரம் அஜித் பெரேரா கலக்கெடு விதித்திருந்தார்.

எனினும், நாளைய தினத்திற்குள் வேட்பாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில், தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற காரணத்தில் அஜித் பெரேரா சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிகொத்த தலைமையகத்திற்கு அருகாமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுடன் மேடையொன்றை அமைத்து இவ்வாறு சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.

பௌத்த மதகுருமாரின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.