நாளை வெள்ளிக்கிழமை துல்ஹிஜ்ஜஹ், மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு
துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த தினம் தலைப்பிறையைக் கண்டவர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய இலக்கங்களில் ஒன்றுடன் தொடர்பு கொண்டு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றனர்.
தலைப்பிறை தீர்மான மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன் ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தலைப்பிறை குறித்து இம்மாநாட்டில் எடுக்கப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையூடாகவும் இதர ஊடகங்கள் மூலமாகவும் மாநாட்டுத் தலைவரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கொழும்பு பெரியபள்ளிவாசல் நிருவாக சபை பொதுச் செயலாளர் பாரிஸ் பஹ்மி தெரிவித்துள்ளார்.
ஏ.எல்.எம்.சத்தார்
ACJU நீங்கள் திருந்தவே மாட்டிங்களா எப்பவுமே இதே குழப்பம் இன்னும் எத்தனை காலம் இவ்வாறு எங்களை வழி தவற விடுவீர்கள் அல்லாஹ்வுக்கு பயப்பட மாட்டீர்களா?
ReplyDeleteஇயக்கங்களை கலைந்து வெளியே வாருங்கள் Please
இம்தியாஸ் போன்ற மடயர்களின் கதைகள் ஒன்றும் புதிதல்ல.
ReplyDeleteகண்ணியமிக்க உலமாக்களை மதிக்கத்தெரியா NTJ செய்த demege போதாதா
Lets learn to repect the leadership..