Header Ads



யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடந்தது (அண்ணனுக்கு தம்பி செய்த துரோகம்)

தனது சகோதரன் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததால் மனை உளைச்சலுக்கு உள்ளாகி நபரொருவா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். 

யாழ்ப்பாணம் - சாவகச்சோி பகுதியை சோ்ந்த நபரே இவ்வாறு விஷம் அருந்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.மாதவன் என்ற குறித்த நபா், 12 வருடங்களுக்கு முன்னா் இங்கிலாந்திற்கு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில், தனது சொந்த ஊரான சாவகச்சோி - அருக்கல்மடத்தில் வீடொன்றை நிா்மாணிக்க ஆசை கொண்டுள்ளாா். 

இது தொடா்பில் தனது இளைய சகோதரரிடம் கூறி வீட்டை நிா்மாணிக்கும் பணியை அவாிடம் ஒப்படைத்துள்ளாா். 

தனது சகோதரனுக்கும் வீடு சொந்தமாக இல்லாததால் அவருக்கும் வீடு ஒன்றை நிா்மாணித்துக்கொள்ளுமாறு மூத்த சகோதரர் இங்கிலாந்திலிருந்து அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளாா். 

இந்நிலையில் இளைய சகோதரா், நிா்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளின் புகைப்படங்களை மூத்த சகோதரருக்கு அனுப்பி வீட்டின் நிா்மாண பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். 

எனவே மூத்த சகோதரா் தனது மனைவி, பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளாா். 

இந்நிலையில் இளைய சகோதரா் தலைமறைவாகியுள்ளதோடு, பின்னா் அது தொடா்பில் சில நாட்கள் ஆராய்ந்த வேளை, எந்த ஒரு வீட்டையும் நிா்மாணிக்காது தமது இளைய சகோதரா் பணத்தை மோசடி செய்துள்ளமை தொியவந்துள்ளது. 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா்.

2 comments:

  1. Very Sad situation.. What a bad Traitor..

    ReplyDelete
  2. மேலுள்ள செய்தியினைப் படிக்கும் நல்லிதயம் உள்ள எவருக்கும் அது படிப்பினையாக இருக்கும். ஒரு சிறு பின்னூட்டல் (Flashback). எனது தகப்பனாருடைய காலத்தில் ஒரு கண்ணியமான “இந்து மாமா” ஒருவர் அவர்களிடம் வேலை செய்து வந்தார்கள். அடிக்கடி வீட்டுக்கு வருவதும் கைமாற்று கால்மாற்றோடு எங்களுடைய வயல் நிலங்களும் அவரது மேற்பார்வையிலேயே முழுவதுமாக இருந்தன. எங்களது ஊருக்கு பக்கத்தில் உள்ள நகரக் கல்லூரியில் நான் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் அவர் அடிக்கடி அவரது விடயமாக அந்த நகரத்திற்கு வரும் காலங்களில் என்னையும் கவனித்துக் கொள்வார். “கவனிப்பு” என்றால் பெரும் கவனிப்பு. எனது தந்தையும் மௌத்தாகிவிட்டார்கள். சிறிது சிறிதாக அவருடைய போக்குவரத்தும் மறைந்துவிட்டது. நாளடைவில் இல்லாமலேயே பல வருடங்களும் கழிந்துவிட்டன. நானும் பெரியவனாகி படிப்பும் முடிந்து தொழிலுக்கும் சென்று விட்டேன். காலங்களும் ஓடுஓடென்று ஓடி மறைந்துவிட்டன. புலிகள், இந்தியன் ஆமி, இலங்கை ஆமி, ஜிகாத் பட்டாளம் என்று ஆண் மாடு யார் பெண் மாடு யார் எனத் தெரியாமல் அரசோச்சிக் கொண்டிருந்த காலம். இதனால் என்னையும் குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த “இந்து மாமா” எங்களிடம் வந்து தனக்கு தொழிலுக்கு உதவி செய்யுமாறு உரிமையுடன் கேட்டார். அப்போதும்கூட எங்கள் பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் உறவுகள் மிக மிக சீரானதாகவே இருந்தன. அவர் எங்கள் தகப்பனாருடன் கொண்ட உறவுக்கு மதிப்பளித்து நாங்களும் அவர் கோரிய தொகையினை அவருக்கு இனாமாகக் கொடுத்தோம். ஆனால் இனாம் என்று அவருக்கு வாயால் சொல்லவில்லை. பின்னர் நானும் எங்கள் வீட்டாருக்கு இவரைப் பற்றி கேட்டு எழுதுவேன். அவர்களுக்குத் தெரிந்தால்த்தானே இவரைப்பற்றி சொல்வதற்கு. நானும் மீண்டும் ஊருக்குத் திரும்பி எனது பழைய தொழிலைச் செய்து கொண்டிருந்தேன். காலமும் ஓடு ஓடென்று மீண்டும் ஓடியது. ஒருநாள் திடீரென அந்த மாமா என்னிடம் வந்து; தம்பி எனக்கும் வயதாகின்றது; இறப்பும் இருக்கு. எமக்கிடையே பழைய கணக்கு ஒன்று இருக்கின்றது. அதனை முடித்துக் கொள்வோம் என்றார். நானும் விடயத்தை விளங்கி எடுத்து; மாமா, நான் முன்பு தந்த பணம் உங்களுக்கு இனாமாகத் தந்ததுதான் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்பதாக இல்லை. இறுதியில் எவ்வளவுதான் என்று பார்ப்போமே என்று நினைத்துக் கேட்டதற்கு அடுத்த நாள் அவருடைய குடும்பத்தாருடன் எனது வீட்டிற்கு வந்த அவர் தந்த எழுத்துக் கணக்கின்படி நான்கு பட்டி ஆடுகள் அவரிடம் இருந்தன. இறுதியில் எனது மனைவியின் பிள்ளைகளின் “உத்தரவி”ன்படி அந்த ஆடுகள் அனைத்தையும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவரது பிள்ளைகளுக்கே ஹதியா செய்தோம். இதிலுள்ள படிப்பினை என்ன? நன்மனம் கொண்டவர்கள் மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்படார். நேர்மையாக நடக்க பெரிதும் முயற்சிப்பர். தாராள மனமுடையவர்களாக இருப்பர். முடிந்தவரை தாங்களால் நேசிக்கப்படுபவர்களுக்கு மனம் விரும்பி உதவியாக இருப்பர். இப்படியானவர்களின் காருண்ய மனத்தால்த்தான் எனது தகப்பன் வசதியுள்ளவர்களாக மாறினார்கள் என்று இதன் பிறகுதான் அறிந்து கொண்டேன். நாங்கள் நம்பிக்கையும் நேர்மையும் நியாயமான எண்ணமும் விருந்தோம்பும் குணமும் உடையவர்களாக விளங்கினால் அதே பந்தே எம்மிடம் திரும்பி வரும். இதில் மதம், சாதி, இனம், மொழி என்பனவெல்லாம் வெறும் புறநடைகள்தான். மனிதர்கள் என்றும் மேன்மக்கள்தான். சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

    ReplyDelete

Powered by Blogger.