Header Ads



யானையின் தாக்குதலில் சிறுமி மரணம் - பாட்டிக்கு பலத்த காயம்

(க.கிஷாந்தன்)

மஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன் மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மஹியாங்கனை குடாவெவ பகுதியை சேர்ந்த ஷாலிக மதுஷானி எனும் 8 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானை ஒன்று வீடொன்றை உடைத்துக் கொண்டு சென்றதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மஹியாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.