Header Ads



அப்பாவி முஸ்லிம்கள் பற்றி, தவறான செய்திகளை வெளியிடும் சிங்கள ஊடகங்கள்

அடிப்­ப­டை­வாத மதக் கொள்­கை­களைப் பரப்­பி­யமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் பேரில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹொர­வப்­பொத்­தான பொலிஸார் ஐவரைக் கைது செய்­தனர். இவர்கள் ஐவரும் அதே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

அவர்கள் கைது செய்­யப்­பட்ட மறு­தினம் மே மாதம் 25 ஆம் திகதி இந்­நாட்டின் பிர­தான தேசிய பத்­தி­ரி­கை­யொன்றின் முன்­பக்க செய்தி பின்­வ­ரு­மாறு தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

“சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா” என்று அச்­செய்தி பிர­தான தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு அச்­செய்­தி­யுடன் தொடர்­பான கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் ஐவரின் புகைப்­ப­டங்­களும் பிர­சு­மா­கி­யி­ருந்­தன.

இவ்­வாறு சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் நால்வர் கெபித்தி கொல்­லாவ பொலிஸ் பிரி­விற்கு உட்­பட்ட எல்­ல­வெவ கிரா­மத்தை சேர்ந்­த­வர்­க­ளாவர். அவர்கள் நூஹு சக­ரியா, செய்னுல் ஆப்தீன் இர்பான், லெப்பே தம்பி ஜெஸ்மின், செய்னுல் ஆப்தீன் கலீ­பத்­துல்லா ஆவார்கள். மற்­றவர் ஹொரவப்­பொத்­தான பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிவு­லே­கட கிராமத்தைச் சேர்ந்த மொஹிதீன் பாவா நவுபர் என்­ப­வ­ராவார்.

குறிப்­பிட்ட தேசிய பத்­தி­ரி­கையின் செய்தி பின்­வ­ரு­மாறும் தெரி­வித்­தி­ருந்­தது. ”அடை­யாள அட்டை இலக்­கங்கள் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் இந்­நாட்டின் சில நபர்­க­ளி­னது வங்கி கணக்கின் ஊடாகவும் இப்­பணம் கிடைக்கப் பெற்­றுள்­ளது” என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
வங்கிக் கணக்­கு­க­ளுக்கு 100 கோடி ரூபா கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் கணக்கில் 100 கோடி ரூபா உள்­ள­தா­கவும் எந்­தவோர் சட்ட பிரி­வி­ட­மி­ருந்து தங்களுக்கு எதி­ராக இது­வரை குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்று அவர்கள் தெரி­விக்­கி­றார்கள். பத்­தி­ரி­கையின் தவ­றான, உண்­மைக்­குப்­பு­றம்­பான செய்­தி­யினால் அவர்கள் சமூ­கத்தில் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

மொழிப் பிரச்­சினை கார­ண­மாக எங்­களின் விப­ரங்­க­ளையும் இது தொடர்­பான உண்மை நிலை­யி­னையும் சிங்­கள ஊட­கங்­க­ளுக்குத் தெரி­விக்க முடி­யாத இக்­கட்­டான நிலையில் தாம் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கி­றார்கள். இதனால் தாம் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கி­றார்கள்.

செய்­தியில் காணப்­படும் பிரச்­சி­னைகள்

குறிப்­பிட்ட பத்­தி­ரிகை செய்தி, சம்­பவம் தொடர்­பான வழக்கின் ‘பி’ அறிக்கை பொலி­ஸா­ரினால் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்பே கைது செய்­யப்­பட்ட ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா இருப்­ப­தாக அந்த ஊட­க­வி­ய­லா­ள­ரினால் எவ்­வாறு தீர்­மா­னிக்க முடியும். ஊட­க­வி­ய­லாளர் இந்தத் தக­வல்­களை நம்­பிக்­கை­யான தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்­டாரா? செய்­தியை பிர­சு­ரிப்­ப­தற்கு முன்பு அச் செய்தி உண்­மை­யா­னது என உறுதி செய்து கொண்­டாரா? நீதி­மன்ற தீர்ப்­பொன்று வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு சம்­பந்­தப்­பட்ட ஐவரும் சஹ்­ரானின் குழு­வினைச் சேர்ந்­த­வர்கள் என்று குறிப்­பி­டு­வ­தற்கு அவர்­க­ளுக்கு கிடைத்த நம்­பிக்­கை­யான சாட்­சிகள் என்ன? சந்­தேக நபர்கள் ஐவரும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அவர்­க­ளது தெளி­வான புகைப்­ப­டங்­களை ஊட­கத்தில் வெளி­யிட்­டது எவ்­வாறு? செய்­தியில் குறிப்­பிட்­டுள்­ள­தன்­படி பொலிஸார் இந்த விப­ரங்­களை வழங்­கி­யி­ருந்தால் அந்த விப­ரங்கள் முறை­யான விசா­ர­ணை­களின் பின்பு வழங்­கப்­பட்­ட­னவா-? என்னும் வினாக்கள் குறிப்­பிட்ட பத்­தி­ரிகை செய்­தியை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தும்­போது எழு­கின்­றன.

விசா­ரணை அறிக்கை

கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் ஐவர் தொடர்பில் பயங்­க­ர­வாதம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கை தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு பொலி­ஸா­ரினால் கெபித்திகொல்­லாவ நீதிவான் நீதி­மன்­றுக்கு சமர்­ப்பிக்­கப்­பட்ட “பி” அறிக்­கையும் வெளி­யா­கி­யுள்­ளது. “பி” அறிக்கை கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வெளி­யிடப்பட்­டுள்­ளது. ஆனால் சட்ட ரீதி­யான இந்த அறிக்­கை­களில் கைது செய்­யப்­பட்ட ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா இருந்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டில்லை.

ஹொர­வப்­பொத்­தான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி

இந்தக் கைது மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஹொர­வப்­பொத்­தான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ரொஷான் சஞ்­சீவ எம்­மிடம் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட இந்த ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா இருந்­த­தாக நானோ, பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த எவரோ ஒரு­போதும் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­க­வில்லை. குறிப்­பிட்ட பத்­தி­ரிகை செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த தவ­றான கருத்­து­களால் ஹொர­வப்­பொத்­தான பொலிஸும் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது. ஹொர­வப்­பொத்­தான பொலிஸ் நிலை­யத்­துக்கு எதி­ராக விசா­ர­ணை­யொன்றும் நடத்­தப்­பட்­டது.

பொலிஸ் மூலம் ஏதா­வது ஊடக அறிக்கை அல்­லது விப­ரங்கள் வெளி­யிப்­பட வேண்­டு­மென்றால், நான் முதலில் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரை தொடர்பு கொள்வேன். அச்­செய்தி அவ­சி­ய­மா­ன­தென்றால் ஊடகப் பேச்­சா­ளரே ஊட­கங்­க­ளுக்கு அதனை வெளி­யி­டுவார். அல்­லாது நான் ஒரு­போதும் ஊட­கங்­க­ளுக்கு தக­வல்­களை வழங்­கு­வ­தில்லை என்றார்.

கெபித்தி­கொல்­லாவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி

சந்­தேக நபர்கள் ஐவரும் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு கெபித்­தி­கொல்­லாவ பொலி­ஸுக்கு அழைக்­கப்­பட்டு வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது என சந்­தேக நபர்கள் ஐவரின் குடும்ப அங்­கத்­த­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தார்கள். இது தொடர்பில் கெபித்­தி­கொல்­லாவ பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் விசா­ரித்தோம்.

சந்­தேக நபர்கள் ஐவரும் சஹ்­ரானின் குழுவைச் சேர்ந்­த­வர்கள் என்றோ 100 கோடி ரூபா வங்கிக் கணக்­கு­களில் வைத்­தி­ருக்­கி­றார்கள் என்றோ எனக்கு எந்தத் தக­வலும் கிடைக்­க­வில்லை அவர்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் கொள்­ளை­களை பரப்­பு­வது தொடர்­பாக கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களை அடுத்தே அவர்­களை பொலி­ஸுக்கு அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்தேன். இந்­நி­லையில் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸா­ரினால் அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கெபித்­தி­கொல்­லாவ பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களை நிறுத்த வேண்­டி­யேற்­பட்­டது என கெபித்­தி­கொல்­லாவ பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்

கைது செய்­யப்­பட்­ட­வர்­களின்சமூகப் பின்­னணி

கைது செய்­யப்­பட்ட எஸ்.ஏ. இர்பான் எல்­ல­வெவ கிரா­மத்தை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வ­ராவார். அவ­ரது மனைவி பாத்­திமா சாஹிதா. அவர் எம்­மிடம் இவ்­வாறு தெரி­வித்தார்.

100 கோடி ரூபா வங்கிக் கணக்கில் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள எனது கண­வ­ரிடம் குறைந்­தது வங்­கியில் சேமிப்புக் கணக்­கொன்­று­கூட இல்லை. எங்­க­ளுக்கு வங்கிக் கணக்­குகள் இல்லை. லைசன் இல்லை, வாகனம் மாத்­தி­ர­மல்ல எங்­க­ளுக்கு இருப்­ப­தற்கு ஒரு இடம் கூட இல்லை. நாங்கள் மிகவும் கஷ்­டப்­பட்டே வாழ்க்­கையை நடத்­து­கிறோம். இப்­ப­டி­யி­ருக்­கும்­போது அந்தப் பத்­தி­ரிகை எம்­மிடம் 100 கோடி ரூபா இருந்­த­தாக எப்­படிக் கூற­மு­டியும். அன்று பொலிஸார் வீட்­டுக்கு வந்து நீண்­ட­நேரம் சோதனை நடத்­தி­னார்கள். என்­றாலும் எங்­க­ளி­டம எதுவும் இருக்­க­வில்லை. அவர்­களால் எதையும் கண்டு பிடிக்­க­மு­டி­ய­வில்லை’ என்றார்.

ஒரு பிள்­ளையின் தந்­தை­யான இர்பான் பள்­ளி­வா­சலில் கட­மை­யாற்­றிய மௌல­வியும் பள்­ளியில் கல்வி கற்­பித்­த­வ­ரு­மாவார். அவ­ரது மனைவி தொழில் செய்­யா­தவர். இர்­பா­னுக்கு சொந்­த­மாக வீடு இல்லை. அவர் தனது மனைவி, பிள்­ளை­யுடன் 5 குடும்­பங்கள் வாழும் சிறிய வீடொன்­றிலே வாழ்­கிறார். அந்த வீட்டில் 5 குடும்­பங்­களைச் சேர்­நத 15 பேர் வாழ்­கி­றார்கள்.

‘பள்­ளியில் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தினமும் 2 கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடந்தே சென்­ற­டை­வார். சைக்கிள் வண்­டி­யொன்­றினை வாங்­கு­வ­தற்குக் கூட அவ­ருக்கு வச­தி­யில்லை’ என இர்­பானின் தந்தை எம்­மிடம் தெரி­வித்தார்.

இர்பான் கைது செய்­யப்­பட்­டதன் பின்பு எமது உற­வி­னர்கள் சிலரும் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்­களும் எங்கள் குடும்­பத்தை ஐ.எஸ். குடும்பம் எனப் பெயர் சூட்­டி­யி­ருக்­கி­றார்கள். எமக்கு எதி­ராகப் பேசு­கி­றார்கள். 100 கோடி ரூபா இருந்தால் ஏன் இவ்­வாறு வறு­மையில் வாழ­வேண்டும் என்று கேள்­வி­யெ­ழுப்­பு­கி­றார்கள். இதனால் எமது குடும்பம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது என்றும் அவர் கண்ணீர் வடிய எமக்குக் கூறினார்.

கைது செய்­யப்­பட்ட மற்­று­மொ­ருவர் ஜெஸ்மின். அவர் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரிந்தார். 2 பிள்­ளை­களின் தந்தை. அவ­ரது மனை­வியும் ஒரு ஆசி­ரியை. ஒரு­ப­குதி நிர்­மா­ணிக்­கப்­பட்ட சாதா­ரண வீட்டில் அவர்கள் வாழ்­கி­றார்கள்.
ஜெஸ்மின் அண்­மையில் வாகன விபத்தில் காயங்­க­ளுக்­குள்­ளானார்.

அதனால் அவ­ரது உடல் பாதிப்­புக்­குள்­ளா­னது. உடல் உபா­தை­க­ளுக்­கான அவ­ரது உப­யோ­கத்­துக்­காக கொமட் உடன்­கூ­டிய கழி­வறை ஒன்­றைக்­கூட அவர்­களால் அமைத்­துக்­கொள்ள முடி­யாத அள­வுக்கு கஷ்­ட­மான வாழ்க்­கையை வாழ்­கிறார். அவர் கழி­வ­றையில் கொமட்­டுக்குப் பதி­லாக ஒரு கதி­ரையைப் பயன்­ப­டுத்தும் நிலையில் நாம் வாழ்­கிறோம் என அவ­ரது மனைவி ஜெபா கைருல் ஹுதா தெரி­வித்தார்.

ஜெஸ்­மினின் மனைவி பாட­சாலைச் சங்­கத்தின் மூல­மாக கட­னொன்­றினைப் பெற்­றுள்­ளதால் அவ­ரது மாதாந்த சம்­ப­ளத்தில் 20 ஆயிரம் ரூபாய் செலுத்­தப்­ப­டு­கி­றது. முன்பு கண­வரின் சம்­ப­ளமும் கிடைத்­தது. அதனால் வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கும் போது­மாக இருந்­தது. இப்­போது அவ­ரது பாது­காப்பும் எமக்கு இல்­லா­ததால் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக அவ­ரது மனைவி தெரி­வித்தார்.

பொலிஸார் இரு தட­வைகள் வந்து வீட்டைச் சோத­னை­யிட்­டார்கள். ஆனால் அவர்கள் எதையும் கொண்டு செல்­ல­வில்லை. 100 கோடி ரூபா குற்­றச்­சாட்டு தொடர்­பாக பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டாலும் பொலி­ஸா­ரி­னாலோ அல்­லது சட்டப் பிரி­வு­க­ளி­னாலோ இது­வரை அவ்­வா­றான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார்.

கைது செய்­யப்­பட்ட மொஹிதீன் பாவா நௌபர் ஹொர­வப்­பொத்­தான கிரா­மத்தைச் சேர்ந்­தவர். அவர் ஒரு பட்­ட­தாரி. அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராகக் கட­மை­யாற்­றி­யவர். நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யாவார். அவ­ரது மனைவி அர­சாங்கப் பாட­சாலையொன்றில் ஆசி­ரி­யை­யாகக் கட­மை­யாற்­று­கிறார். அவர் கைது செய்­யப்­பட்ட தினம் அவ­ரது முழு வீடும் பொலி­ஸாரால் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ரது வங்கி கணக்குப் புத்­தகம் மற்றும் கட­வுச்­சீட்டு என்­பன பொலி­ஸாரால் கைப்­பற்றப்பட்­டுள்­ளன.

இந்தக் கைதுக்குப் பின்­ன­ணியில் அர­சியல் பழி­வாங்கல் இருப்­ப­தாக தான் சந்­தே­கிப்­ப­தாகக் குறிப்­பிடும் நௌபரின் மனைவி சித்தி ஆயிஷா, பத்­தி­ரி­கையில் வெளி­வந்த செய்­தியைச் சுட்­டிக்­காட்டி நாங்கள் அரை­கு­றை­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீட்­டிலே வாழ்­கிறோம்., வீட்டின் முன்­ப­குதி அமானா வங்­கி­யி­லி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்ட கடன் மூலமே நிர்­மா­ணிக்­கப்­பட்­டது என்றார். அந்தக் கடனைச் செலுத்தி முடிக்க பல வரு­டங்கள் செல்லும். மேலும் பல இடங்­க­ளுக்கும் கடன் தொகை செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது என்றும் கவ­லைப்­பட்டார்.

எவ­ருக்கும் எமது வங்கிக் கணக்­கு­களை பரி­சோ­தனை செய்ய முடியும். எங்­க­ளது வங்கிக் கணக்­கு­க­ளுக்கு எமது மாத சம்­ப­ளமே இடப்­பட்­டுள்­ளது என்­பதை அப்­போது அறிந்து கொள்­ளலாம். பத்­தி­ரிகைச் செய்­தியில் தெரி­வித்­துள்­ள­படி எங்­க­ளிடம் 100 கோடி இருந்தால் நாம் ஏன் இவ்­வாறு துன்­பப்­பட வேண்டும்?
நௌபர் தொழில் நண்­பர்கள் மற்றும் கிராம மக்­க­ளுடன் கௌர­வ­மான வாழ்க்கை வாழ்ந்­தவர், செயற்­பட்­டவர். பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்ட 100 கோடி ரூபா குற்­றச்­சாட்டு கார­ண­மாக அவ­ரது தொழில் நண்­பர்கள் அவர் மீதான நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர் என அவ­ரது குடும்ப உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். அத்­தோடு கிரா­மத்தில் நீண்­ட­கா­ல­மாக நிலவி வந்த சிங்­கள– முஸ்லிம் உற­வுக்கு இடையில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளதால் மன­உ­ளைச்­சல்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

என். சக­ரியா, எல்­ல­வெவ கிரா­மத்தில் கைது செய்­யப்­பட்ட மற்­று­மொ­ரு­வ­ராவார். சோளப் பயிர்ச்­செய்கை மூலம் தனது வாழ்க்­கையை நடத்தி வந்த இவர் சில­காலம் மௌல­வி­யாகப் பணி­பு­ரிந்­த­வ­ராவார். இவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார். மனைவி தொழில் எதுவும் செய்­யா­தவர்.

அவ­ரது மனைவி மஹ்ரூப் நஸீஹா கைது தொடர்பில் தெரி­விப்­பது; எங்­க­ளுக்கு சொத்­துக்­க­ளென்று இருப்­பது பிள்­ளை­களும் இந்த வீடும் மாத்­தி­ரம்தான். சஹ்ரான் பற்றி நாம் தெரிந்து கொண்­டதும் இந்தச் சம்­ப­வத்தின் பிற­குதான். எனது கணவர் விவ­சாயம் செய்து கிடைத்த வரு­மா­னத்தின் மூலமே நாம் வாழ்ந்தோம். தற்­போது அவர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பதால் நாம் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். பல வேளை­களில் நாம் பசி­யுடன் இருந்த நாட்­களும் உள்­ளன. அக்கம் பக்­கத்­தி­லுள்­ள­வர்கள் எம் மீது அனு­தா­பப்­பட்டு செய்யும் உத­விகள் மூலம்தான் சாப்­பிட்டு, நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். இந்தப் பகு­தி­களில் காட்டு யானை­களின் பிரச்­சி­னையும் இருக்­கி­றது. மிகுந்த பயத்­து­டனே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கிறோம் என்றார்.

கலீ­பத்­துல்­லாவும் எல்­ல­வெவ கிரா­மத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ராவார். இவர் 5 பிள்­ளை­களின் தந்­தை­யாவார். கலீபத்­துல்­லாவின் தந்தை கலீ­பத்­துல்­லாவின் பிள்­ளை­களை நோக்கி தனது இரு கரங்­க­ளையும் ஏந்­தினார்.
பின்பு இவ்­வாறு தெரி­வித்தார், “ கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்கள் பத்­தி­ரி­கையைக் கொண்டு வந்து எம்­மிடம் காட்டும் வரை 100 கோடி ரூபா கதை எங்­க­ளுக்குத் தெரி­யாது. இந்தப் பிள்­ளை­களின் காது­களில் இருக்கும் காத­ணி­களை நன்­றாகப் பாருங்கள் அவை தங்கம் அல்ல. தங்க காத­ணிகள் இரண்டு அவர்­க­ளுக்கு வாங்கிக் கொடுப்­ப­தற்குக் கூட எங்­க­ளுக்கு வசதி இல்லை. நான் எனது மக­ளுக்குக் கொடுத்­தி­ருக்கும் இந்தக் காணியும் இந்த வீடும் பிள்­ளைகள் ஐவ­ருமே எங்­க­ளுக்­குள்ள சொத்­துக்கள்” என்றார் அவர்.

தவ­றான செய்­தியைவெளி­யிட்ட பத்­தி­ரிகை தெரி­வித்­தவை

கைது செய்­யப்­பட்ட ஐவரின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா வைப்பில் உள்­ள­தாக செய்தி வெளி­யி­டு­வ­தற்கு முன்பு அத்­த­க­வலின் உண்மைத் தன்மை, அது தொடர்­பான நம்­பிக்­கை­யான சாட்­சி­யங்கள் மூலம் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா? என நாம் குறிப்­பிட்ட பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் மற்றும் செய்­தியை எழு­திய ஊட­க­வி­ய­லாளர் ஆகி­யோ­ரிடம் வின­வினோம்.

அந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு நேரம் இருக்­க­வில்லை. தவ­றான செய்­தி­யொன்­றினை வெளி­யிட்­டது தொடர்பில் கவ­லையைத் தெரி­வித்துக் கொள்­கிறேன் என பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் தெரி­வித்தார்.
செய்­தியை வெளி­யிட்ட ஆசி­ரியர் குழாத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் கருத்து தெரி­விக்­கையில், செய்தி சரி­யா­னதா? என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தீர்­களா? இல்­லையா? என்று நீங்கள் கோரு­வது தொடர்பில் எந்த வகை­யான தெளி­வு­களை வழங்­கு­வ­தற்கும் நான் உட்­பட்­ட­வ­னல்ல. 100 கோடி ரூபா வங்கிக் கணக்கில் வைப்­பி­லுள்­ள­தான தகவல் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸாரால் எனக்குக் கூறப்­ப­ட­வில்லை என்றார்.

சிங்களத்தில்: நிராசா பிய­வ­தனி தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல் 

1 comment:

  1. Press freedom is essential, but at the same time media should be responsible for what they publish or broadcast. There must be laws to punish the media severely for irresponsible reporting. Presidential candidates should be asked to make this as an election issue.

    ReplyDelete

Powered by Blogger.