Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, கோத்தபாயவுக்கு வாய்ப்பில்லை - பொதுஜன பெரமுன மக்களை ஏமாற்றியுள்ளது

நாட்டின் சட்டத்திற்கு அமைய கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் அவர் தற்போதும் அமெரிக்க பிரஜை என்பதே இதற்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மத்துகமையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்டரீதியற்ற ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அண்ணனும் தம்பியும் தெரிந்து செய்தார்களா என்பது எனக்கு தெரியவில்லை.

பிறந்த நாட்டை கைவிட்டு, அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொண்ட ஒருவர் நாட்டை கட்டியெழுப்ப தேவையில்லை. நாட்டை கட்டியெழுப்ப தயாரான உண்மையான தலைவர்கள் எமது முகாமில் இருக்கின்றனர்.

நான், மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன போன்றவர்கள் எப்போதும் நாட்டை கைவிட்டு, வெளிநாடு ஒன்றில் குடியுரிமை பெற்றதில்லை எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.