அகில தனஞ்ஜய, கேன் வில்லியம்சன் பந்து வீச்சில் சந்தேகம்
இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜய மற்றும் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் பந்து வீசும் முறை சட்டவிரோதமானது என தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் சபை மீண்டும் முறைப்பாடு செய்துள்ளது.
அதனால் 14 நாட்களுக்குள் அவர்கள் பந்துவீசும் மறை தொடர்பில் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அவர்களின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment