“ஜனாதிபதி வேட்பாளராக பொதுமக்கள், என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது"
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி வேட்பாளராக பொது மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேட்பாளராகக் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவுவதாக தெரிவிக்கப்படும் உள்ளக பிரச்சினைகளை எதிர்காலத்தில் சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றோம்.அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
Post a Comment