Header Ads



கட்சித் தலைமையை பாதுகாப்பதில், ரணில் மும்முரம் - பலமடையும் சஜித் டீம் - அலரியில் முக்கிய கூட்டம்

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் இழுபறி நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருக்கும் நிலையில், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை அவசரமாக அழைத்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையில் விசேட சந்திப்பொன்றை இன்று காலை நடத்தியுள்ளார். எனினும், இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் விசேட சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தச் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் ஒன்றை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐ.தே.க. எம்.பிக்கள் கடிதமொன்றையும் கையளிக்கத் தயாராகி வருகின்றனர். 77 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 77 பேரில் பெரும்பாலானவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதில் கையெழுப்பம் இட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்த பின்னரே புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பின்கள் கருதுகின்றனர். எனினும், கூட்டணியை அமைத்த பின்னர் வேட்பாளர் யார் என்பதை தெரிவுசெய்யலாம் என்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார்.

ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மகன் சத்துர சேனாரத்ன எம்.பி, ஜாதிக்க ஹெல உறுமய கட்சித் தலைவர் சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய ஆகியோர் இருக்கினறனர். சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு இந்தத் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மறுமுனையில், சஜித் பிரேமதாசவைக் களமிறக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர். அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச என்று நாடு முழுவதும் சுவரொட்டிப் பிரசாரமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். அத்துடன், ”சஜித் வருகிறார்” என்ற தலைப்பில் எதிர்வரும் 12ஆம் திகதி பதுளையில் பொதுக் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹரீன் பெர்னாண்டோ இதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகிறார்.

சஜித் பிரேமதாசவை களமிறக்க வேண்டுமென ஒரு தரப்பு முயற்சித்து வரும் நிலையில், கட்சித் தலைமைப் பதவியைக் காத்துக் கொள்ளும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்க மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்பில் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று இறுதியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் இந்த வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இழுபறி நிலை நீடிக்கிறது.

அலரி மாளிகையில் நாளை நடக்கும் கூட்டத்தில் இணக்கம் எட்டப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். TN

3 comments:

  1. POLI MUSLIM THALAIVAR UNP YODU
    THAN IRUPPAN. MARATHAI YANAIKU
    VITRAVAN.

    ReplyDelete
  2. Ranil Wickremasinghe is "TOTAL BETRAYAL". Sri Lankans who love their "Maathruboomiya" cannot forget the betrayal he did on February 22nd., 2002 when he signed a so-called "peace truce" with Prabakaran, the LTTE leader with the conaivance of Norway, behind the back of then President Chandrika Bandaranaike Kumaratunge. She accused Wick-remesinghe of violating the Constitution for having shown her the deed a day after the LTTE chief had signed it. Sri Lankan Muslims should realize how this so-called peace treaty sidelined the Muslims, especially in the North and Eastern provinces and how much we suffered as a result of Ranil signing this. Now Ranil is doing similar international treaties behind the back of President Maithripala Sirisena too. The UNP should decide who they want at the next Presidential and General Elections - "SAJITH or RANIL as their leader. For the UNP it should be SAJITH. Between SAJITH and GOTABAYA, Sri Lankans who love their "Maathruboomiya" should vote GOTABAYA.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  3. your comments may be true, but when we looking at the last presidential election, the results shows that 84% of SL muslim voted in favor of UNP candidate. still you have to work very very hard to make a change to divert with real reasons. Not only to muslim, but also the SL Tamils mind,

    ReplyDelete

Powered by Blogger.