சஜித்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை, கட்சியின் கட்டளைகளை மீறியதாக குற்றச்சாட்டு
கட்சியின் யாப்பினை மீறி ஒழுக்க விதிமுறைகளை தகர்த்து செயற்படும் நபர்கள் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைவருக்குக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே சஜித் பிரேமதாச பிரச்சாரங்களை செய்வது கட்சியின் தலைமைத்துவ கட்டளைகளை மீறிய செயல்.
ஆகவே அவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறு இருப்பினும் கட்சி பிளவுபட அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசமிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
(ஆர்.யசி)
Post a Comment