சஜித்தும் ரணிலும் கலந்துபேசி, வாக்கெடுப்பின்றி தீர்மானத்திற்கு வருவதே சிறந்தது
அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து பேசி வாக்கெடுப்பொன்று இன்றி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால் அதுவே வரவேற்கத்தக்கதாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு, பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு ஆகியன இணைந்து நடாத்தும் கூட்டத்தில் வாக்கெடுப்பொன்று நடாத்தப்படுமா? என இன்று(20) ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போதே இதனைக் கூறினார்.
Post a Comment