இரகசிய வாக்குமூலம் வழங்கிய, சஹ்ரானின் மனைவி
கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளிஉல் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவன், பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்று -15- கோட்டை நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.
ஷங்ரில்லா ஹோட்டலில் தர்கொலை தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளான மொஹம்மட் சஹ்ரான் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணைகளின் சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கைகள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த இரகசிய வககு மூலத்தை வழங்கியுள்ளார்.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment