Header Ads



கோட்டாபயவிடம் இருந்து, பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு..?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தேவையான பின்புலத்தை உருவாக்கும் நோக்கில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா முயற்சித்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். 

அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து சரத் பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தாகவும் அவர் கூறினார். 

அந்த தொலைப்பேசி அழைப்பில் பழைய கோபத்தை விட்டு தம்முடன் இணைந்து பயணிக்க முன் வருமாறு கோட்டாபய அழைப்பு விடுத்தாக மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார். 

எனினும் அந்த அழைப்பை பொன்சேக்கா நிராகரிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.