Header Ads



தம்புள்ளை விபத்தில் 3 பேர் வபாத்

தம்புள்ளை - ஹபரண வீதியின் குடாகஸ்வெவ பகுதியில் நேற்று பின்னிரவு  வேளையில்  இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் 

*மல்லவபிட்டிய – குருநாகல் என்ற முகவரியை சேர்ந்த 33 வயது அப்துல் நபார் ராஜா ( வேன் சாரதி)

* பொலனறுவை முஸ்லிம் கொலனியை சேர்ந்த 40 வயது  பாத்திமா சிபானா  ஒருவரும்

*பொலனறுவை முஸ்லிம் கொலனியை சேர்ந்த 27 வயது பாத்திமா சப்னா என்ற  பெண் ஒருவருமே உயிரிழந்து உள்ளனர்.

1 comment:

Powered by Blogger.