Header Ads



சிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு

குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி ஐ டி அவரை இன்று -11- குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.

அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டரை தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் இல்லையென பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி டாக்டரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை இருந்தது.

2 comments:

  1. சத்தியத்துக்காக 7 சட்டத்தரணிகள் டாக்டர் ஷாபிக்குச் சார்பாக வாதாடிய போது பொய்யையும் புரட்டையும் நயவஞ்சத்தையும் மேன்படுத்த ஷாபி டாக்டருக்கு எதிராக 20 சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்த பெரும்பான்மையை வைத்து நீதிபதி மற்றொரு 14 நாட்களுக்கு டாக்டர் அவர்களை சிறைப்படுத்தியிருக்கலாம்.அல்லது காபிர்களின் பலவந்தம் காரணமாகவும் இருக்கலாம்.எதுவானாலும் பரவாயில்லை. பொறுமையாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் நிச்சியம் உண்மை வெல்லும்,சத்தியம் அழியும்.

    ReplyDelete
  2. “Everything has beauty, but not everyone sees it.”

    ReplyDelete

Powered by Blogger.