Header Ads



ஹக்கீம் + றிசாத் நாடு திரும்புகிறார்கள் - மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க தீர்மானம், விரைவில் திகதி நிர்ணயம்


அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்பதில் காணப்பட்ட நெருக்கடிகள் தீர்க்கப்பட்டிருப்பதால், ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் பதவியேற்கத் தீர்மானித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி தெரிவித்தார். 

அமைச்சுப் பதவிகளை ஏற்பதில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் பதவியேற்கும் நாள் எப்போது என்பதை இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி கூறினார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இருவரும் வெளிநாடு சென்றிருப்பதால், அவர்கள் நாடு திரும்பியதும் இதுகுறித்து தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் இன்று மாலை கூட விருப்பதாகவும், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று நாடு திரும்பவுள்ளதாகவும் தாருஸ்ஸலாம் வட்டாரம் தெரிவித்தது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments

Powered by Blogger.