சீனத்து பெண்ணின் வீட்டில், கொள்ளையடித்த எதிர்கட்சி தலைவர் கைது
ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
அவர் நீர்கொழும்பு நகரில் வைத்து கட்டான காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டு பெண்ணொருவருக்கு சொந்தமான வீடொன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றமை ஆகிய முறைப்பாடுகளுக்கமைய அவர் கைது செய்யபபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவர் ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ நாளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment