Header Ads



சிங்கள மதவெறி சக்திகளை வரவேற்ற, தமிழ் அரசியல்வாதிகள் இப்பொழுது என்ன செய்யப்போகின்றார்கள்..?

இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

இலங்கையில் மீண்டும் சிங்கள இராச்சியத்தை நிறுவவேண்டுமென கண்டியில் பெரும் எடுப்பில் மாநாடு கூட்டி பொதுபலசேனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க விரும்புகிறோம்.

இஸ்லாமிய அடிப்படைவாத சவால்களுக்கு எதிரான இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் சாட்டில் கலப்படமற்ற சிங்கள - பௌத்த பேரினவாதம் விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கின்றது.

1956இல் முன்வைக்கப்பட்ட சிங்கள இராச்சிய வெறிக்கூச்சல் தான், 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு இறுதியில் அடிகோலியது என்பதனை மறந்து மீண்டும் பேரினவாதம் அரசியல் அரங்கை ஆக்கிரமிக்க துடித்து நிற்கின்றது.

இலங்கைத் தீவில் இன - மத சமத்துவத்திற்கு இடமில்லை என்பதை இந்தப் பேரினவாத ஆதிக்க சக்திகள் பிரகடனப்படுத்தியுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையில் பௌத்த - சிங்கள மதவெறி சக்திகளின் தலையீட்டை இருகரம் நீட்டி வரவேற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு சில சமூக அமைப்புக்களும் இப்பொழுது என்ன செய்யப்போகின்றார்கள்? என வினவப்பட்டுள்ளது.

2 comments:

  1. இதைத்தான் கடந்த மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா கேட்டார் அந்த வேளையில் கல்முனையில் குடைபிடித்தவர் சங்கடத்துடன் நெளிந்து,வளைந்து,சொல்ல வார்த்தையில்லாமல் மின்னல் நிகழ்ச்சி முழுவதும் தடுமாறி அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.இதற்கு முன் மட்டைகளப்பிலும்,கல்முனையிலும் தமிழ் மக்களை முட்டாளாக்கி அவர் பேசிய வீர வசனங்கள்,மின்னல் நிகழ்ச்சியில் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.கிழக்கில் கைக்கூலிகலை வைத்து அவர்கள் கிழக்கு தமிழனை முட்டாளாக்க முனைவதை நான் எப்போவோ இங்கே பதிவிட்டேன்.இப்போது உண்மையாகிவிட்டது.குறிப்பாக இங்கே பதிவிடும் கைக்கூலிகலின் சில வால்கள் எங்கே தெரியவில்லை ஓடிவிட்டார்கல்.”அப்பாவி தமிழ் மக்களை வீர வசனம் பேசி கிழக்கில் முட்டாளாக்க முனைந்தவருக்கு மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா கேட்ட கேள்விகள் செருப்படி” இனி கிழக்கு தமிழனுக்கு புரிந்து விட்டது இவர்கள் யார்? ஏன் Muslim மக்களுடன் தமிழனை முட்டி மோத வைக்க முனைவது அனைத்தும் இப்போது வெளிச்சமாகிவிட்டது.

    ReplyDelete
  2. ஸ்ரீ காந்தா ஐயாவுக்கு அஜனும் அநுசாதும் தான் பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.