Header Ads



மகளை பரீட்சைக்காக அழைத்துச்சென்ற வேளை விபத்து ; தந்தையும் மகளும் பலி

(செ.தேன்மொழி)

வேயாங்கொட பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வேயாங்கொட - வந்துரவௌ பகுதியில் இன்று காலை 6 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் , 11 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே விபத்து இடம்பெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.