Header Ads



ஓய்வை அறிவித்த சொயிப் மலிக், சானியா பாராட்டு - வசீம் அக்ரம் விமர்சிப்பு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள  பாக்கிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சொயிப் மலிக்கிற்கு கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்த விடயங்களிற்காக அவரது மனைவி சானியா மிர்சா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அனைத்து கதைகளிற்கும் ஒரு முடிவுண்டு,ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பமே என சானியா மிர்சா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களாக நீங்கள் உங்கள் நாட்டிற்காக பெருமையுடன் விளையாடியுள்ளீர்கள் நீங்கள் தொடர்ந்தும் அவ்வாறு பெருமையுடன் விளையாடுகின்றீர்கள் என அவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

நானும் உங்கள் பிள்ளையும் நீங்கள் சாதித்தது அனைத்து குறி;த்தும் நீங்கள் யார் என்பது குறித்தும் பெருமிதம் அடைகின்றோம் எனவும் சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

முன்னதாக சொயிப் மலிக் தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

நான் மிகவும் நேசித்த ஒருநாள் போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெறுகின்றேன்,இந்த ஓய்வு எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கும் இருபதிற்கு இருபது உலககிண்ணத்திற்கு என்னை தயார்படுத்துவதற்கும் உதவும் என  சொயிப்மலிக் தெரிவித்துள்ளார்.

2

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த முன்னாள் கேப்டனான 37 வயது சோயிப் மாலிக் இந்த உலக கோப்பை போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் 3 ஆட்டங்களில் ஆடிய மாலிக் 8 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். அதன் பிறகு அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் சோயிப் மாலிக் ஓரங்கட்டப்பட்டார்.

பிரிவு உபசார போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்க சோயிப் மாலிக் தகுதியானவரா? என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம் கேட்ட போது, ‘சோயிப் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நிறைய பங்களிப்பை அளித்து இருக்கிறார். இதனால் அவர் உயரிய நிலையுடன் விடைபெற தகுதியானவர் தான். ஆனால் இந்த உலக கோப்பை போட்டியில் சோயிப் மாலிக் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. 2 முறை டக்-அவுட் ஆனார். இது ஒன்றும் கிளப் கிரிக்கெட் போட்டி அல்ல. தற்போது அவர் ஆடும் நிலையை பார்க்கையில் பிரிவு உபசார போட்டிக்கு மாலிக் தகுதியானவர் அல்ல. அவருக்கு வழியனுப்பு விழா விருந்து நடத்த ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.

No comments

Powered by Blogger.