Header Ads



ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்

மஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹா சங்கத்தினர் தொடர்பில் தான் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலை வணங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் மஹா சங்கத்தினரை எப்போதும் மதிப்பேன். நான் அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு மதத்திற்கு எதிராகவும் கருத்து வெளியிட எனக்கு அவசியம் இல்லை.

மஹா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்பதற்கு நான் தவறு செய்யவில்லை. தவறு செய்யும் தேரர்கள் என்றால் என்னால் வணங்க முடியாது. ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. அவர்கள் பௌத்த பிக்குக்கள் அல்ல.

பல பிக்குக்களின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் அடங்கிய ஆவணங்களை பிரதமரிடம் காட்டினேன். அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. Very good work Mr Ranjan.

    ReplyDelete
  2. நீங்கள் அரசியல் செய்ய தகுதியானவர் தலைவரே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சகல மதங்களிலும் “ரௌடி சாமியார்கள்” இருக்கின்றார்கள்தான். இல்லையென்று சொல்லவில்லை. இஸ்லாம் கிறிஸ்தவம் இந்து இப்படி நீட்டிக் கொண்டே போகலாம் பாருங்க. சும்மா யோசிச்சுப் பாருங்க. எங்கட விகிதாசாரம் என்ன அவஙகட விகிதாசாரம் என்ன? நாங்க வெறும் 20-22% ம்தான். ஆவங்க 78%. ஆவங்க செய்யுற கிறிமினல் வேலை எல்லாம் பெரிசாத்தான் தெரியும். ஏதோ ரஞ்ஞன் துணிஞ்சுதான் இதில் இறங்கியுள்ளார். அது எல்லோருக்கும் நல்லம்தானே.

    ReplyDelete
  4. First of All send all Monks to Medical check up Truth and more shameful information will come to public...

    ReplyDelete
  5. First of All send all Monks to Medical check up Truth and more shameful information will come to public...

    ReplyDelete

Powered by Blogger.