Header Ads



சூட்சுமமான முறையில், மைத்திரியை ஏமாற்றிய ரணில் - மகிந்த குடும்பத்தையும் காய் வெட்டினார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றியுள்ளார் என எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். எனினும் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்தவர் மீண்டும் போட்டியிட கூடாது என்று தனக்கும், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கூடாது என்று கோத்தபாய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயது 35 ஆக அதிகரித்தமை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை மையப்படுத்தியே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிக சூட்சுமமான முறையில் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே இன்றைய அரசியல் அதிகார பிரச்சினைக்கு பிரதான காரணம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றியுள்ளார். ஆகவே அதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.