முஸ்லிம்களுக்கு எதிரான ஞானசாரருக்கு, ஜனாதிபதி அதிருப்தி - தொலைபேசியில் தொடர்பும் கொண்டார்
நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான அநாவசிய கைதுகள், அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள், பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எஸ்.எஸ். அமீரலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் குறித்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. நீங்கள் மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுதலை செய்த ஞானசார தேரர் இன்று உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இன முரண்பாடுகள் மேலெழும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கிருந்தவாறே ஞானசார தேரரை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட ஜனாதிபதி, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியினை வெளியிட்டார். அத்துடன் தொடச்சியாக இவ்வாறு செயற்பட்டால் மீண்டுமொரு தடவை என்னால் உங்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் மன்னிப்பு என்றால் அவருக்கு அடுத்தமுறையும் சிறை தண்டனை நெருங்குது அதட்கும் ஜனாதிபதி இப்பவே மன்னிப்பு கொடுக்க தாயார் நிலையில் உள்ளார் போலும்!
ReplyDeleteமீண்டும் ஒரு முறை சனாதிபதியா வாற ஆசையோ !
ReplyDeleteMEENDUM JANAZIPAZIYAVAZA ??? AYYYÝYOOOÒW
ReplyDelete